< Back
மாநில செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
கரூர்
மாநில செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தினத்தந்தி
|
12 Jun 2022 6:06 PM GMT

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

தோகைமலை

தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் பயிற்சி நடந்தது. கொரோனா காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை நிறைவு செய்யும் பொருட்டு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறன்களை வளர்க்கும் பொருட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், கரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் பெலிசிட்டா, விமலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியத்தில் இருந்து 120 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மேலும் செய்திகள்