< Back
மாநில செய்திகள்
எண்ணும் எழுத்தும் பயிற்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

எண்ணும் எழுத்தும் பயிற்சி

தினத்தந்தி
|
13 Jun 2022 4:19 PM GMT

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி ஒரு வாரம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, அரியலூர் ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் மல்லிகா, சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.இதில் கண்டமங்கலம் மற்றும் வழுதாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் சேகர், சுமதி, மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன், பயிற்சியின் கருத்தாளராக சரசு, ஆனந்தா நிதியுதவி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலைச்செல்வி, மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

மேலும் செய்திகள்