< Back
மாநில செய்திகள்
குடிநீர் வழங்காததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குடிநீர் வழங்காததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தினத்தந்தி
|
31 Aug 2023 6:45 PM GMT

குடிநீர் வழங்காததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தலைஞாயிறு பேரூராட்சி கூட்டத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரூராட்சி கூட்டம்

தலைஞாயிறு பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார். இதில் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டு அவரவர் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, தெருவிளக்கு, சாலை வசதி ஆகியவை குறித்து பேசினர்.

வெளிநடப்பு

தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. பேரூராட்சிக்கு சரிவர குடிநீர் வழங்காத பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்காத பேரூராட்சி தலைவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செந்தமிழ் செல்வி பிச்சையன் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என உறுதியளித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதவன், முத்துலட்சுமி, அருணா, அஜய் ராஜா, ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்