< Back
மாநில செய்திகள்
நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை புதிய உத்தரவு..!
மாநில செய்திகள்

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை புதிய உத்தரவு..!

தினத்தந்தி
|
29 July 2022 10:03 AM GMT

தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே நியாயவிலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது

இவற்றை நியாய விலைக்கடை ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்