< Back
மாநில செய்திகள்
சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்வு கூட்டம்

தினத்தந்தி
|
20 May 2022 1:46 PM GMT

ஆரணியில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது

ஆரணி

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி, போளூர், ஜமுனாமரத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகாவில் உள்ள பொதுமக்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமை தாங்கினார்.

வட்ட வழங்கல் அலுவலர்கள் லலிதா (ஆரணி), மஞ்சுளா (கலசபாக்கம்), மனோகரன் (போளூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தும் நுகர்வோர் மற்றும் கியாஸ் ஏஜென்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு குறைபாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்