< Back
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
3 April 2023 7:54 PM GMT

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6-ந்தேதி நடக்கிறது.


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை இயக்குதலும், பராமரித்தலும் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வல்லம் சாலையில் உள்ள தஞ்சை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலகங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் வந்து தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்