< Back
மாநில செய்திகள்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர்
மாநில செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
22 Jan 2023 6:45 PM GMT

திருவாரூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-திருவாரூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. துர்க்காலயா சாலையில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மேற்பார்வையாளா் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் திருவாரூர் நகர், புறநகர், கச்சனம், அடியக்கமங்லம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி, மற்றும் அதம்பார் பகுதிகளுக்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை மனுவாக கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்