< Back
மாநில செய்திகள்
கீழே விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

கீழே விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
23 Jun 2023 7:05 PM GMT

ராஜபாளையத்தில் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி இறந்தார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே ஆர்.ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 43). கட்டிட தொழிலாயான இவர் அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது வீட்டின் முன்பு உள்ள வாருகாலில் போடப்பட்ட மரப்பலகையில் மிதித்ததால் பலகை உடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்துசாமியை மீட்டு கல்லமநாயக்கன்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
மேலும் செய்திகள்