< Back
மாநில செய்திகள்
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலி

தினத்தந்தி
|
15 July 2023 12:15 AM IST

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமம் காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் நடராஜன்(வயது 43), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ராஜாத்தி (38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை நடராஜன், தனது வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக நடராஜன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நடராஜனை பரிசோதித்த டாக்டா்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்