< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்

தினத்தந்தி
|
4 May 2023 6:45 PM GMT

அ.தி.மு.க. நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

பரமக்குடியில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி நகராட்சி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அ.தி.மு.க. நிர்வாகியான சிகாமணி ஜாமீன் வழங்க கோரி ராமநாதபுரம் மகிளா கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத், சிகாமணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண்-1 கோர்ட்டில் காலையும், மாலையும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அ.தி.மு.க. நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகரன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு அது இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்