< Back
மாநில செய்திகள்
ஊராட்சி தலைவர்களுக்கு கணினி பயிற்சி
மதுரை
மாநில செய்திகள்

ஊராட்சி தலைவர்களுக்கு கணினி பயிற்சி

தினத்தந்தி
|
30 July 2022 8:20 PM GMT

ஊராட்சி தலைவர்களுக்கு கணினி பயிற்சி

உசிலம்பட்டி

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கணினி பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வள மைய ஒருங்கிணைப்பாளர் பரணிதரன் முன்னிலை வகித்தார். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்று பேசினார். தே. கல்லுபட்டி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கணக்கு அலுவலர் பெருமாள், மாவட்ட திட்ட மேலாளர் யோகேஷ்குமார், மாவட்ட வள மைய உதவியாளர் உதயமூர்த்தி ஆகியோர் நிதி மேலாண்மை மற்றும் அடிப்படை கணினி பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவமணி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவியாளர் சந்திரா மற்றும் மகேஷ் செய்திருந்தனர்

மேலும் செய்திகள்