< Back
மாநில செய்திகள்
கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்: சீமான் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு
தென்காசி
மாநில செய்திகள்

கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்: சீமான் உள்பட 75 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
20 Jun 2023 6:45 PM GMT

கல்குவாரிக்குள் அத்துமீறி நுழைந்த புகாரின் பேரில் சீமான் உள்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அப்போது, அங்குள்ள கல்குவாரி மூலம் பாதிப்புகள் ஏற்படுவதாக சீமானிடம் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து சங்கரன்கோவில் அருகே ஆனையூர் சாலையில் உள்ள கல்குவாரிக்கு சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் சென்றனர். அப்போது, கல்குவாரியின் கேட் மூடப்பட்டு இருந்தது. அங்கு பணியில் இருந்த வடக்கு புதூரைச் சேர்ந்த சண்முகசாமியிடம் கேட்டை திறக்குமாறு கூறினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, அவர்கள் கேட்டை பிடித்து தள்ளி அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சண்முகசாமி சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சீமான் உள்பட அவரது கட்சியினர் அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்ததாகவும், இதை தடுக்க முயன்ற தன்னை சிலர் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சீமான் உள்பட 75 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்குவாரிக்குள் அத்துமீறி நுழையும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்