< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
5 April 2023 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து கணக்கன்குடிக்கு இயக்கப்பட்ட மாலைநேர பஸ் நிறுத்தப்பட்டுள்ளது.. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த நிறுத்தப்பட்ட பஸ் சேவையை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குருபாலன், சிவகங்கை.

சாலையில் திரியும் கால்நடைகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றம் சுற்றுவட்டார பகுதி சாலைகளில் கோவில் காளைகள் மற்றும் நாய்கள் அதிகம் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து செல்வம், திருப்புவனம்.

விபத்து அபாயம்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதி சாலைகளில் சில இடங்களில் சாலையோரங்களில் மண் மேவி காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கற்பகம், மானாமதுரை.

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கடை வீதிகளில் சிலர் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகனஓட்டிகளும் நடந்து செல்வோரும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

வேல்குமார், காரைக்குடி.

நடவடிக்கை தேவை

சிவகங்கை நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதி சாலைகளில் சிலர் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை (ஹாரன்) வாகனங்களில் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களும் மற்ற வாகன ஓட்டிகளும் மிகவும் பதற்றமடைகின்றனர். இதனால் விபத்துக்களும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடக்க வேண்டும்.

மகேந்திரன், சிவகங்கை.

மேலும் செய்திகள்