< Back
மாநில செய்திகள்
புகார் பெட்டி
தென்காசி
மாநில செய்திகள்

புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 April 2023 6:45 PM GMT

தென்காசி புகார் பெட்டி

புகார்பெட்டி செய்தி எதிரொலி;

மின்விளக்கு அமைப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் மாயமான்குறிச்சி பஞ்சாயத்து 3-வது வார்டு வாணியர் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்ததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன எதிரொலியாக அங்கு புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரக்கேடு

புளியங்குடி டி.என்.புதுக்குடி பாம்புகோவில் சந்தை சாலை தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மகேந்திரன், டி.என்.புதுக்குடி.

தடம் மாறும் பஸ்சால் மாணவர்கள் அவதி

சுரண்டையில் இருந்து கட்டேறிபட்டி, புங்கம்பட்டி, மயிலப்புரம் வழியாக பாபநாசத்துக்கு இயங்கி வந்த அரசு பஸ் (வழித்தட எண்:-313) கடந்த சில நாட்களாக மேட்டூர் வழியாக சென்று விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தடம் மாறும் அரசு பஸ்சை உரிய வழித்தடத்தில் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பாலாஜி, கட்டேறிபட்டி.

போக்குவரத்து நெருக்கடி

செங்கோட்டை மெயின் பஜார் வழியாக கேரள மாநிலத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருகி விட்டன. இதனால் காலை, மாலையில் கடும் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

பஸ் நிறுத்தத்தை மறைத்த டிஜிட்டல் பேனர்

கடையம் யூனியன் கடையம்பெரும்பத்து பஞ்சாயத்து வெய்க்காலிபட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடத்தின் முன்பாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது அங்கு பஸ் நிறுத்தத்தை மறைத்தவாறு டிஜிட்டல் பேனரும் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் நிழற்கூடத்துக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?.

-அற்புத ஜெகன் பிரகாஷ், வெய்க்காலிபட்டி.

மேலும் செய்திகள்