< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
மதுரை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Sep 2022 7:54 PM GMT

புகார் பெட்டி

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எஸ்.வலையப் பட்டிக்கு மாலை நேரத்தில் இயக்கப்படும் பஸ் இயக்கப்பட வில்லை. இதனால் இப்பகுதி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் மாலை நேரத்தில் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருமங்கலம்.

புதர்கள் அகற்றப்படுமா ?

மதுரை மாநகர் 54-வது வார்டு அனுப்பானடி ராஜா நகர் 1- வது தெரு குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் புதர் மண்டி கிடக்கின்றன. மேலும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. புதர் மண்டி காணப்படுவதால் விஷப் பூச்சிகளின் தொல்லையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு போதிய அளவு பஸ்கள் வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பஸ்கள் வராததால் இப்பகுதி மக்களும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், அலங்காநல்லூர்.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமான அளவில் இல்லை. மேலும் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, சோழவந்தான்.

மின்விளக்குகள் தேவை

மதுரை வில்லாபுரம் மேம்பாலத்தில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரநாத், மதுரை.

மேலும் செய்திகள்