சிவகங்கை
தினத்தந்தி புகார் பெட்டி
|புகார் பெட்டி
வாகன ஓட்டிகள் சிரமம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பல பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி வாகனங்களும் பழுதாகி விடுகிறது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?
பொதுமக்கள், காரைக்குடி.
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் ஒய்யவந்தான் பேச்சாத்தகுடி கிராமத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. நாய்க்கடியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், காளையார் கோவில்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பா ஊரணி 34 மற்றும் 35-வது வார்டுகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வீட்டின் பின்புறம் வழியாக பன்றிகள் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் பன்றிகளால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. தொல்லை தரும் பன்றிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சேகர், காரைக்குடி.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சுற்றுலா தலமான பிரான்மலை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
சுப்பையா, பிரான்மலை.
குடிநீர் குழாயில் உடைப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பழையுர் அருகே நரிக்குடி செல்லும் சாலையின் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் நீர் கசிவால் சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்புவனம்.