< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகள்600 பேர் பங்கேற்பு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகள்600 பேர் பங்கேற்பு

தினத்தந்தி
|
3 Feb 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 600 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

விளையாட்டு போட்டிகள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மே மாதம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக 50 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதற்காக மாவட்டந்தோறும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்து இருந்தது.

அதன்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கு பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், இறகுப்பந்து மற்றும் கையுந்துபந்து போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

600 மாணவிகள் பங்கேற்பு

இதில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர். இதேபோல் இன்று (சனிக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

மேலும் கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வருகிற 15-ந் தேதி வரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்