< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி

தினத்தந்தி
|
20 March 2023 7:00 PM GMT

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதியவர் பலியானார்.

வேடசந்தூர் அருகே உள்ள ராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் கடந்த 16-ந் தேதி கெண்டையகவுண்டனூர் அருகே உள்ள பூஞ்சோலைமேடு பகுதியில் ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கே.புதுக்கோட்டையை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் ைசக்கிள், அவர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனிசாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்