< Back
மாநில செய்திகள்
ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
31 Aug 2023 10:00 PM GMT

ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

அரியலூர் கல்லக்குடி தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் சபரிவாசன் (வயது 19). இவர் கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான அரசு (20), சக்தி (20), கோகுலக்கண்ணன் (21), சூரியா (20), ஹரிஹரன் (17), சரவணகுமார் (19) ஆகியோருடன் உடையார்பாளையம் அருகே மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் 3 நாள் பயிற்சி வகுப்பை முடித்து விட்டு நேற்று மாலை உடையார்பாளையம் பெரியகோவிலை சுற்றி பார்க்க சென்று உள்ளனர்.

அப்போது அங்குள்ள பெரிய ஏரியில் அரசு, சக்தி ஆகியோர் குளித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஏரியின் நடுவில் அமைந்துள்ள நீராவி மண்டபத்துக்கு சென்று உள்ளனர். அதை பார்த்த சபரிவாசனும் குளிக்க ஆசைப்பட்டு ஏரியில் குதித்து நீராவி மண்டபத்துக்கு பாதி தூரம் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அரசு மற்றும் சக்தி ஆகியோர் சபரிவாசனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் தனபாலன் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சபரிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்