< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
சங்கராபுரம் அருகேகல்லூரி மாணவர் திடீர் சாவு
|9 Sep 2023 6:45 PM GMT
சங்கராபுரம் அருகே கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்தாா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் வினித்குமார் (வயது 19). இவர் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார். அப்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். உடன் அவரை, சங்கராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தனசேகரன் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.