< Back
மாநில செய்திகள்
தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம்
விருதுநகர்
மாநில செய்திகள்

தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணம்

தினத்தந்தி
|
30 Sep 2023 8:50 PM GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரெயில் தண்டவாளத்தில் கல்லூரி மாணவர் பிணமாக கிடந்தார். அவரது வீட்டிலும் ரத்தக்கறை காணப்பட்டதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேல தொட்டியபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாய வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 21).

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ெரயில் தண்டவாளத்தில் ெரயிலில் அடிபட்டு அவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

வீட்டில் ரத்தக்கறை

அங்கு அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இறந்த கிருஷ்ணகுமார் வீட்டில் ரத்தக்கறை காணப்பட்டதால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து விட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்