< Back
மாநில செய்திகள்
மாணவர்களுடன் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துரையாடல்
மதுரை
மாநில செய்திகள்

மாணவர்களுடன் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துரையாடல்

தினத்தந்தி
|
20 Aug 2023 7:45 PM GMT

``நான் முதல்வன்'' திட்டத்தில் மாணவர்களுடன் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துரையாடல் நடத்தினர்

திருப்பரங்குன்றம்

நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் உயர்கல்வியான கல்லூரி கல்வியை பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய ஊர்களை சேர்ந்த 52 பள்ளிகளில் இருந்து 805 அரசு பள்ளி மாணவர்கள் திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி வளாகம், வகுப்பு அறைகள், நூலகம், ஆய்வு கூடங்கள், அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இந்தநிலையில் கல்லூரி பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், ஒழுக்க நெறிகள் குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துரையாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமசுப்பையா, கல்லூரியின் மாணவர் நலன் முதன்மையர் அழகேசன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

மேலும் செய்திகள்