< Back
மாநில செய்திகள்
நல்லாசிரியர் விருது பெற்ற 8 பேருக்கு கலெக்டர் பாராட்டு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

நல்லாசிரியர் விருது பெற்ற 8 பேருக்கு கலெக்டர் பாராட்டு

தினத்தந்தி
|
4 Sep 2022 4:52 PM GMT

நல்லாசிரியர் விருது பெற்ற 8 பேருக்கு கலெக்டர் பாராட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு திருப்பத்தூர் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளி, முதுகலை உயிரியல் ஆசிரியர் வல்லபதாஸ், திருப்பத்தூர் டி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கலைச்செல்வி அருணகிரி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நல்லாசிரியர் விருது சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதை வழங்குகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 8 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தனர். ‌

மேலும் செய்திகள்