< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  5-ம் நாள் ஜமாபந்தியில் 103 மனுக்களை கலெக்டர் பெற்றார்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் 5-ம் நாள் ஜமாபந்தியில் 103 மனுக்களை கலெக்டர் பெற்றார்

தினத்தந்தி
|
1 Jun 2022 4:37 PM GMT

பரமத்திவேலூரில் 5-ம் நாள் ஜமாபந்தியில் 103 மனுக்களை கலெக்டர் பெற்றார்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுக்கான 5-ம் நாள் ஜமாபந்தி பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். இதில் அர்த்தனாரிபாளையம், மாணிக்கம்நத்தம், பரமத்தி, வீரணம்பாளையம், புஞ்சை இடையார் (மேற்கு), வேலூர், பில்லூர், சீராப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்