< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஆய்வு

தினத்தந்தி
|
7 July 2022 7:00 PM GMT

நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆய்வு செய்தார்.

இல்லம் தேடி கல்வி திட்டம்

கொரோனா நோய் பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத சூழல் இருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கவும் தமிழக முதல்-அமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாய கூடம் போன்ற பொது இடங்களில் போதிய இடைவெளியில் மாணவ, மாணவிகளை அமர வைத்து தன்னார்வலர்களை கொண்டு எளிய முறையில், தினசரி ஒரு மணிநேரம் முதல் 1½மணி நேரம் வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மாணவ - மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள இடங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக 4,553 பெண் தன்னார்வலர்கள் மூலம் 62,083 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி நகராட்சி தொடக்க பள்ளி இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் வகுப்பினை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கற்பிக்கப்பட்ட பாடங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் செய்திகள்