< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

தினத்தந்தி
|
28 Oct 2022 6:45 PM GMT

நாமக்கல்லில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம், வேலைவாய்ப்பு, சுய தொழில், வங்கிக் கடன் உதவி, முதியோர் ஓய்வூதியம் மற்றும் வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 26 கோரிக்கை மனுக்களை சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நிரந்தர புகைப்பட கண்காட்சியை தியாகிகளின் வாரிசுதாரர்கள் பார்வையிட்டனர்.

இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் தேவிகா ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்