< Back
மாநில செய்திகள்
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.52 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
நாமக்கல்
மாநில செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்ரூ.52 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்

தினத்தந்தி
|
21 Aug 2023 7:00 PM GMT

நாமக்கல்லில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, வங்கி கடனுதவி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள்கோரி மொத்தம் 315 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தாட்கோ மூலம் ரூ.49.21 லட்சம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு கடனுதவியும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.2.56 லட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு கடனுதவியும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் 4 பயனாளிகளுக்கு ரூ.24 ஆயிரம் மதிப்பில் இலவச சலவை பெட்டி மற்றும் இலவச தையல் எந்திரங்கள், 2 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.52 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

கோரிக்கை மனுக்கள்

மேலும் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றதோடு, உரிய நடவடிக்கையை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்