< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ஏல அங்காடியில்  பட்டுக்கூடுகள் விலை உயர்வு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை உயர்வு

தினத்தந்தி
|
12 Nov 2022 6:45 PM GMT

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை உயர்வு

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று 691 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.732-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.44 உயர்ந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.776-க்கும், குறைந்தபட்சமாக ரூ.495-க்கும், சராசரியாக ரூ.703.98-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 804-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்