< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைந்தது

தினத்தந்தி
|
30 Sep 2022 6:45 PM GMT

தர்மபுரி அங்காடியில் பட்டுக்கூடு வரத்து குறைந்தது

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து நேற்று வழக்கத்தை விட கணிசமாக குறைந்தது. 383 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக ரூ.737-க்கும், குறைந்தபட்சமாக ரூ.629-க்கும், சராசரியாக ரூ.690.40-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 733-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்