< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

தினத்தந்தி
|
28 Jun 2022 1:53 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 772 கிலோ தேங்காய்களை ‌விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.10-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 657-க்கு ஏலம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த ‌ஏலத்திற்கு 10 ஆயிரத்து 550 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.24.36-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.‌23-க்கு விற்பனை நடந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 290-க்கு தேங்காய் ஏலம் போனது.

மேலும் செய்திகள்