நாமக்கல்
பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை
|பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு 11 ஆயிரத்து 165 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.26.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.20-க்கும், சராசரியாக ரூ.24.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 230-க்கு தேங்காய் விற்பனை ஆனது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 11 ஆயிரத்து 702 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.23.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.17.30-க்கும், சராசரியாக ரூ.22.00-க்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 127-க்கு தேங்காய் விற்பனை ஆனது. தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.