< Back
மாநில செய்திகள்
தேங்காய்,பருப்புகள் ரூ.19¾ லட்சத்துக்கு ஏலம்
கரூர்
மாநில செய்திகள்

தேங்காய்,பருப்புகள் ரூ.19¾ லட்சத்துக்கு ஏலம்

தினத்தந்தி
|
3 Aug 2022 6:16 PM GMT

சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்,பருப்புகள் ரூ.19¾ லட்சத்துக்கு ஏலம் போனது.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் க.பரமத்தி பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணெய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

ரூ.19¾ லட்சத்துக்கு ஏலம்

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.77குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 70தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.86-க்கும், குறைந்த விலையாக ரூ.21.29-க்கும், சராசரி விலையாக ரூ.24.36-க்கும் என ரூ.87 ஆயிரத்து 109-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 234.87 குவிண்டால் எடை கொண்ட 502 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது.

இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.84.39-க்கும், குறைந்த விலையாக ரூ.82.20-க்கும், சராசரி விலையாக ரூ.83.76-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.40-க்கும், குறைந்த விலையாக ரூ.66.60-க்கும், சராசரி விலையாக ரூ.78.99-க்கும் என ரூ.18 லட்சத்து 86 ஆயிரத்து 644-க்கு விற்பனை ஆனது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை மொத்தம் ரூ.19 லட்சத்து 73ஆயிரத்து 753-க்கு விற்பனை ஆனது.

மேலும் செய்திகள்