< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ரூ.13¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
|7 July 2022 7:00 PM GMT
பரமத்திவேலூர் சந்தையில் ரூ.13¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 19 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.86.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.29-க்கும், சராசரியாக ரூ.83.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 16 ஆயிரத்து 29-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
ஆனால் நேற்று நடந்த ஏலத்திற்கு 17 ஆயிரத்து 283 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.70- க்கும், சராசரியாக ரூ.80.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 27 ஆயிரத்து 439-க்கு வர்த்தகம் நடந்தது.