< Back
மாநில செய்திகள்
ரூ.5¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ரூ.5¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
9 Feb 2023 6:45 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.5¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஏலம் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த வாரம் 20 ஆயிரத்து 685 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.33-க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 12 ஆயிரத்து 347-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 120 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.82.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.53.39-க்கும், சராசரியாக ரூ.78.42-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 86 ஆயிரத்து 516-க்கு விற்பனையானது.

மேலும் செய்திகள்