< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ரூ.14½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
|30 Sep 2022 7:07 PM GMT
பரமத்திவேலூரில் ரூ.14½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 27 ஆயிரத்து 757 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.75.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.89-க்கும், சராசரியாக ரூ.73.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.19 லட்சத்து 56 ஆயிரத்து 61-க்கு ஏலம் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 21 ஆயிரத்து 223 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.78.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.69-க்கும், சராசரியாக ரூ.75-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.14 லட்சத்து 58 ஆயிரத்து 534-க்கு ஏலம் நடைபெற்றது.