< Back
மாநில செய்திகள்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
மதுரை
மாநில செய்திகள்

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.

தினத்தந்தி
|
20 Sep 2022 8:38 PM GMT

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி,

மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 22 விவசாயிகளின் 58 ஆயிரத்து984 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 16 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.13.13-க்கும்குறைந்த பட்சமாக ரூ.5.14-க்கும் சராசரியாக ரூ.8.22-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.4 லட்சத்து 84ஆயிரத்து 782 தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 15 விவசாயிகளின் 2,342 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் 4 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.78.40 குறைந்த பட்சமாக ரூ.48.60-க்கு சராசரியாக ரூ.66.53 ஏலம் போனது. இதனால் ரூ.1லட்சத்து 55 ஆயிரத்து 814 கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயாவைதொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்