< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தினத்தந்தி
|
31 Dec 2022 6:45 PM GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுக்கூடுகள் ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று 501 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று முன் தினம் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.670-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் நேற்று பட்டுக்கூடு கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது. அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.720-க்கும், குறைந்தபட்சமாக ரூ.439-க்கும், சராசரியாக ரூ.646.30-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 377-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்