< Back
மாநில செய்திகள்
தர்மபுரி அங்காடியில்ரூ.7 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி அங்காடியில்ரூ.7 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தினத்தந்தி
|
19 Oct 2023 7:00 PM GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 336 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,732 கிலோவாக அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.540-க்கும், குறைந்தபட்சமாக ரூ.315-க்கும், சராசரியாக ரூ.446.16-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 756-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்