< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கடலோர காவல் படை வீரர் சாவு
|8 Aug 2023 9:26 PM GMT
கடலோர காவல் படை வீரா் திடீரென இறந்தார்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ள மேலக்கோபாலபுரம் மாதாநகரை சேர்ந்தவர் இன்பதமிழன் (வயது29). இவர் இந்திய கடலோர காவல் படையில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 3 மாதங்களாக ஒடிசாவில் பயிற்சியை முடித்து விட்டு கடந்த 3-ந்தேதி சொந்த ஊரான மேல கோபாலபுரத்திற்கு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவர் திடீரென கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இன்பதமிழன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.