< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் துணி திருட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் துணி திருட்டு

தினத்தந்தி
|
24 Aug 2022 11:59 AM GMT

திருவள்ளூர் அருகே ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான துணிகள் திருடப்பட்டது.

திருவள்ளூர் அடுத்த மப்பேடு காந்திப்பேட்டையில் தனியார் துணி ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் உள்ள நிறுவன கிளைக்கு லாரி மூலம் பேண்டு துணி ஏற்றி அனுப்பி வைப்பது வழக்கம்.

அந்த லாரியை கடந்த 15 ஆண்டுகளாக காந்திப்பேட்டை பகுதியை சேர்ந்த கவுரி முருகன் ஓட்டிச்செல்வார்.

காந்திப்பேட்டையில் இருந்து கொடுத்து அனுப்பும் துணியின் எண்ணிக்கையை விட காடுவெட்டியில் இறக்கும் போது உள்ள துணியின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இது குறித்து ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது கடந்த ஏப்ரல் மாதம் ரூ.4 லட்சம் மதிப்பிலான துணிகளை லாரி டிரைவர் கவுரி முருகன் குறைவாக ஒப்படைத்து உள்ளார் என்பது தெரியவந்தது.

இது குறித்து தொழிற்சாலை மேலாளர் அருள்ஜோசப் மப்பேடு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்