< Back
மாநில செய்திகள்
முதலாம் ஆண்டு  மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா
தென்காசி
மாநில செய்திகள்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா

தினத்தந்தி
|
18 Oct 2023 6:45 PM GMT

வாசுதேவநல்லூர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடந்தது.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. தங்கப்பழம் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.டி.முருகேசன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் காளிச்செல்வி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுந்தரகுமார், நெல்லை சட்டக்கல்லூரி முதல்வர் லதா, மூத்த வக்கீல் கனக சபாபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சட்ட அகராதி மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி ஆர்த்தி நன்றி கூறினார். மாணவர் பேட்ரிக் டாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்