< Back
மாநில செய்திகள்
இருதரப்பினர் இடையே மோதல்: உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேர் காயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்: உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேர் காயம்

தினத்தந்தி
|
22 March 2023 6:52 PM GMT

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

அறந்தாங்கி களப்பக்காடு தெருவை சேர்ந்த பாஞ்சாலி என்பவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 46), பொன்னமராவதி அருகே உள்ள பொன் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன், அறந்தாங்கி களப்பக்காடு தெருவை சேர்ந்த லதா ஆகியோர் சென்றனர். இதையடுத்து பாஞ்சாலி உடலை அவரது உறவினர்கள் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள எரியூட்டும் மேடைக்கு கொண்டு சென்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், சதீஷ், கண்ணன், லதாவை மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்