< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூர் புனித மரியன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
|25 Dec 2022 6:45 PM GMT
அரூர்:
அரூர் கச்சேரி மேட்டில் உள்ள புனித மரியன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து உறவினர், நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன் இனிப்பு வழங்கினர். பங்குதந்தை செபாஸ்டியன், ஜான் மைக்கேல் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைசெய்தனர்.