< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை சாவு
|20 July 2023 9:50 PM GMT
தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்தது
மேலூர்,
மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் மதிக்குமார். இவருடைய மனைவி ராஜசுதா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஹரிபிரசாத் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஹரிபிரசாத் அப்பகுதியில் படிக்கட்டுக்கு கீழே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான். இதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.