< Back
மாநில செய்திகள்
அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
திருவாரூர்
மாநில செய்திகள்

அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

தினத்தந்தி
|
27 Jan 2023 6:44 PM GMT

திருவாரூர் அருகே, காட்டூரில் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருவாரூர்;

திருவாரூர் அருகே, காட்டூரில் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் துர்கா ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அஞ்சுகம் அம்மையார் நினைவிடம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவு நாளையொட்டி திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி ஜெயந்தி சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மரியாதை செலுத்தினர்

இதேபோல மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோரும் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் உறவினர்கள், தி.மு.க. பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்