< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி
சிவகங்கை
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி

தினத்தந்தி
|
23 May 2022 7:47 PM GMT

சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி காரைக்குடி அருகே அரியக்குடியில் \நடைபெற்றது

காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சாணக்யா அகாடமி சார்பில் நடந்த இந்த போட்டியை பள்ளி தாளாளர் ரோஸ்லின் ஜீலியானா தொடங்கி வைத்தார். சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முன்னதாக சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக கூடுதல் செயலாளர் பிரகாஷ்மணிமாறன் வரவேற்றார். போட்டியில் 7 வயதிற்கான பிரிவு மற்றும் 17 வயதிற்கான பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சே்ாந்த 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் செல்லத்துரை, பள்ளி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்