தூத்துக்குடி
செஸ் போட்டி
|மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது
தென்திருப்பேரை:
செஸ் ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆழ்வார்திருநகரி வட்டார அளவிலான அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியை ெதன்திருப்பேரை நகர பஞ்சாயத்து தலைவி மணிமேகலை ஆனந்த் தொடங்கி வைத்தார். பேரூராட்சி நிர்வாக அலுவலர் ரமேஷ் பாபு, வட்டார கல்வி அலுவலர் டக்லஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த போட்டியில் 75 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 13 அரசு நடுநிலைப் பள்ளிகள், 2 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திருச்செந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் தலைமையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜி, உடற்கல்வி ஆசிரியை பொன்ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.