< Back
மாநில செய்திகள்
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரெயில் நீட்டிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரெயில் நீட்டிப்பு

தினத்தந்தி
|
28 May 2024 6:00 PM GMT

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்கள் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையில் இருந்து இரவு 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06070) வரும் ஜூன் 6, 13, 20, 27 (வியாழக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நெல்லை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06069) வரும் ஜூன் 7, 14, 21, 28 (வெள்ளிக்கிழமை மட்டும்) ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06019) வரும் ஜூன் 2, 16, 30 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06020) வரும் ஜூன் 3, 17 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில்

இதேபோல, நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06021) வரும் ஜூன் 9, 23 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06022) வரும் ஜூன் 10, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட இருக்கும் இந்த ரெயில்கள் ஏற்கனவே சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்டது. தற்போது, மேற்கண்ட தேதிகள் முதல் இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து திருத்தப்பட்ட அட்டவணை மற்றும் நிறுத்தங்களுடன் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்