< Back
மாநில செய்திகள்
சர்வதேச செஸ் போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவ மாணவியருக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சர்வதேச செஸ் போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவ மாணவியருக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
14 Jun 2022 3:23 AM GMT

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியை காண செங்கல்பட்டு மாவட்ட மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் பத்மஶ்ரீ. டி கே எஸ். ஶ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்தப்படும் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வரும் ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 15 வயதுக்கு உட்பட்ட செங்கல்பட்டு மாவட்ட மாணவ மாணவிகள் பங்கு பெறும் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள அகில இந்திய சதுரங்க கழகத்தில் (எஐசிஎப்) பதிவு செய்திருந்தால் போதுமானது. நுழைவுக்கட்டணம் கிடையாது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளோர் புவனேஸ்வரி - 8438310773, முத்துக்குமார் - 9500912898, கோகிலா ராஜேஷ் - 9791144262, சுகன்யா கண்ணன் - 9940567200 ஆகியோர்களின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், www.easypaychess.com என்ற இணைய தளத்தின் வாயிலாகவும் தங்களது பெயர்களை ஜூன் 14 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் முதல் 25 இடங்களை வெல்லும் மாணவ மாணவியர்க்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். முதல் இடத்தை பெறும் மாணவ, மாணவிக்கு ஒலிம்பியாட் போட்டியை காண வாய்ப்பு, போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகள் இலவசமாக செய்து தரப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்