< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சமையல்காரர் சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சமையல்காரர் சாவு

தினத்தந்தி
|
19 Aug 2023 6:45 PM GMT

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சமையல்காரர் பரிதாபமாக இறந்தார்.

நாகா்கோவில்,

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சமையல்காரர் பரிதாபமாக இறந்தார்.

சமையல்காரர்

நாகர்கோவில் வடசேரி ரவிவர்மன் புதுத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 52). சமையல்காரர். இவர் நேற்று காலையில் மற்றொரு சமையல்காரரான திருவனந்தபுரம் பாலராமபுரத்தை சேர்ந்த நாகராஜன் (52) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மோட்டார் சைக்கிளை நாகராஜன் ஓட்டினார். பின்னால் சுப்பிரமணியம் உட்கார்ந்திருந்தார்.

விபத்தில் சாவு

பால்பண்ணை சந்திப்பு அருகே சென்ற போது சுப்பிரமணியம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சமையல்காரர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்